Friday, January 25, 2008

நமது வாழ்வில் இம்மையும் மறுமையும் - 1

அல்லாஹ்வன் திருப்பெயரால்

நமது வாழ்வில் இம்மையும் மறுமையும் - 1
அஸ்ஸலாமு அலைக்கும்!

முஸ்லிம்களின் நிலைப்பாடு இன்றைய காலகட்டத்தில் மேற்கண்ட விஷயத்தி ல் எவ்வாறு உள்ளது? என்பதை விளக்குவதே இத்தலைப்பின் நோக்கம்.
இந்த உலக வாழ்க்கை நிரந்தரமான மறுமை வாழ்க்கையை தேர்வு செய்யும் ஒரு தேர்வு களம்தான். எல்லாவிதத்தலும் மறுமையின் இன்பத்தோடு இந்த உலக வாழ்வின் இன்பத்தை ஒப்பிட்டால் இது மிகவும் அற்பமானது. அதுமட்டுமல்ல இது நிரந்தரமானது அல்ல. ஆனால் மறுமையோ நிரந்தரமானது. மறுமையின் நரக வேதனையானது இந்த உலகில் அனுபவிக்கும் அதிகபட்சமான துன்பத்தோடு ஒப்பிட்டால் கூட இது ஒன்றுமில்லை. இது ஒரு பெரிய துன்பமும் கிடையாது. நரக வேதனையோ படுபயங்கரமானது. அல்லாஹ் (ஸுப்) அதை விட்டும் நம்மைக்காப்பாற்ற வேண்டும். அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் நல்லடியாராக நாம் இந்த உலகில் வாழ அல்லாஹ் (ஸுப்) விடம் பிரார்த்தத்துக் கொள்வோம்.
மேலே சுருக்கமாக கூறப்பட்ட கருத்தில் எந்த ஒரு முஸ்லிமுக்கும் மற்றுக்கருத்து இருக்க முடியாது. இல்லவுமில்லை. ஆனால் மிகவும் வேதனைக்குரிய விஷயம் இவையாவும் ஏட்டளவில்தான் இருக்கின்றன.
இதற்கான சான்று
ஏட்டளவில் இருக்கின்ற இந்த விஷயம் சாதாரனமான ஒரு விஷயமில்லை. ஒவ்வொரு முஸ்லிமின் இலக்கே மறுமை வெற்றியாகத்தான் இருக்க முடியும். அந்த இலக்கை நோக்கி பயணிக்காமல் அதை சிதைக்கும் விதமாக அதற்கு நேர் எதிர் திசையல் பயணிக்கின்ற நம்முடைய செயல்பாட்டை எப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்வது.
இவைகளுக்கென்ன சான்று? , இன்று நடைமுறையில் கண்முன் நடக்கின்ற நமது செயல்பாடுகள்தான் இவைகளுக்கு சான்றாக இருக்கின்றது. நமது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன? அல்லாஹ் (ஸுப்) இதைப்பற்றி நமக்கு என்ன கட்டளையிடுகின்றான்? இவைகளை இதன் தொடர்ச்சியிலே காண்போம் இன்ஷா அல்லாஹ்!
தொடரும்..

சகோதரர் பீஜேயின் ஜகாத் பற்றிய விளக்கங்களுக்கு குர்ஆன், ஹதீஸ் வழியில் பதில்கள்.

No comments: