Monday, November 19, 2007
ஜகாத் - ஓர் ஆய்வு - பீ.ஜேயின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன்
தமிழகத்தில் இஸ்லாம்
தமிழகத்தில் இஸ்லாம் இன்று எந்த நிலையில் இருக்கின்றது என்பதை விளக்குவதும், இதன் மூலம் சில விஷயங்களில் நாம் நம்மை, சீர்திருத்திக்கொள்ள வேண்டும் என்பதும் தான் இந்த தலைப்பை தமிழக முஸ்லீம்களின் முன் வைப்பதன் நோக்கம்.
(1) முதல் நிலை:
தமிழகத்தில் முஸ்லிம்களின் மத்தியில் மார்க்கத்தில் இல்லாத அனாச்சாரங்களும், அவலங்களும் பெருகி கிடந்த நேரம் இது. நிரந்தர நஷ;டத்தை தரக்கூடிய இணைவைப்புகள், பஞ்சமில்லாமல் நடந்து கொண்டிருந்த காலம். இஸ்லாம் என்ற பெயரிலே யார் எதை சொன்னாலும் அதை நம்பி செயல் படுத்தி நஷ;டவாளிகளாக பெரும்பாலான முஸ்லிம்கள் வலம் வந்து கொண்டிருந்த நேரம் இது.
இந்த நிலையில் தான் எகத்துவமும், இஸ்லாம் அதன் தூய வடிவிலும் மக்களின் மத்தியில் எத்திவைக்கின்ற பணி ஆரம்பமாகின்றது. இந்த பிரச்சாரத்திற்கு பல எதிர்ப்புகள் பல வழிகளில் வந்தது. அவைகளை எல்லாம் சகித்துக் கொண்டு, அடி, உதைகளையும் வாங்கி, இரத்தம் சிந்தி உறுதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
அல்லாஹ்வின் அருளால், அதன் விளைவுகளை இன்று கண்கூடாக காணக்கூடியதாக இருக்கிறது. இணைவைப்பில் சிக்கி கிடந்தவர்களும், பித்அத்தில் மூழ்கி இருந்தவர்களும் அதில் இருந்து விடுபட ஆரம்பித்துள்ளனர். ஏகத்துவத்தின் பக்கம் திரள ஆரம்பித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் அதிக அளவில் குவிய ஆரம்பித்துள்ளனர். புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!
இப்படியான ஒரு எழுச்சியை மக்கள் மத்தியில் கொண்டு வர பல உலமாக்கள் காரணமாயிருந்தனர். அதிலும் குறிப்பாக மதிப்பிற்குறிய மௌலவி பி.ஜே. அவர்களின் பங்கும் செயல்பாடும் மிகவும் அதிகமானது. அல்ஹம்துலில்லாஹ்.
(2) இரண்டாவது நிலை:
தமிழகத்திலே இஸ்லாமிய ஏகத்துவத்தின் அடித்தளம் செம்மையாக அமைக்கப்பட்டு, முஸ்லீம்கள் அதன்பால் குவிய ஆரம்பித்துவிட்டனர். இந்த நேரத்திலேதான் 'வெண்ணெய் திரளும் போது தாழி (பாணை) உடைந்த கதை'யாக சில நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்வுகள் உலக முஸ்லீம்களையும், அறிஞர்களையும், தமிழகத்தின் பக்கம் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்க்க வைத்துள்ளது.
ஏகத்துவம் என்ற கட்டிடத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. இனி கட்டிடத்தை கட்டி பூர்த்தி செய்து அதன் பலனை முழுமையாக அடைவதுதான் பாக்கி என்றிருக்கும் நேரத்தில்தான், அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்கின்ற சில நிகழ்வுகள் ஒரு புறம் நடக்க ஆரம்பிக்கின்றது.
அஸ்திவாரம் ஆட்டம் கானுவதின் விளக்கம்
இஸ்லாத்தின் அடிப்படை அஸ்திவாரத் தூண்களில் ஒன்றான ஜகாத் விஷயத்திலும், இன்னும் சில விஷயங்களிலும், இதுவரை யாரும் சொல்லாத, பின்பற்றாத கருத்துக்களை, மதிப்பிற்குரிய மௌலவி பி.ஜே. அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அனைவருக்கும் மாற்றமான ஒரு கருத்தை பி.ஜே. அவர்கள் சொல்கின்றார்கள் என்ற கரணத்தினால் அது தவறு என்று நாம் கூறவில்லை. எந்த ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு அவர் ஒரு கருத்தை சொல்கின்றாறோ அந்த ஆதாரம் தவறானதாக இருக்கின்றது. ஆதாரத்தின் அடிப்படையில்தான் முடிவை எடுக்கிறோம். ஆதாரம் தவறானதாக போய்விட்டால் அதன் அடிப்படையில் எடுத்த முடியும் தவறுதான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆனால் பி.ஜே. அவர்களோ, ஆதாரம் தவறாக போனால் என்ன? நான் சொன்ன கருத்தை மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கின்றார். தான் சொன்ன கருத்துக்கு வேறு ஆதாரங்கள் இருக்கின்றதா? என்று தேடி, அப்படி ஏதும் இல்லாத காரணத்தினால் 'இது தான் ஆதராம்' என்று வேறு சில ஆதாரங்களை காட்ட முற்படுகிறார்.
அவர் சொல்லக்கூடிய கருத்துக்கு, அவைகள் ஆதாரமாக இல்லை. அவர் சொல்லிவிட்ட கருத்தை மாற்றிக்கொண்டிருக்க வேண்டியவர், நான் சொன்ன கருத்து சொன்னதுதான், என்பதிலே பிடிவாதமாக இருப்பதுடன் அதற்காக இல்லாத சான்றுகளை எல்லாம் இவைதாம் சான்றுகள் என்கிறார்.
இவை அனைத்தையும் ஆதாரங்களுடனும், நிரூபணங்களோடும் நாம் பார்க்க இருக்கின்றோம் இன்ஷh அல்லாஹ்.
இதே போன்று வேறு சில விஷயங்களிலும், பி.ஜே. அவர்கள் மாறுபட்ட கருத்தை பிரச்சாரம் செய்கின்றார்கள். நாம் இங்கு அப்படிப்பட்ட விஷயங்களில் இரண்டை எடுத்துக் கொண்டுள்ளோம்.
(1) ஜகாத்
(2) குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்
இவைகளை நாம் எடுக்கக் காரணம், ஜகாத் இஸ்லாமிய அடிப்படையிலே ஒரு அம்சம். இதைப் போலவே நபி மொழியின் முக்கியத்துவத்தை நாம் விளக்கவேண்டியதில்லை.
மூன்றாம் நபராக முரண்பட்ட கருத்தை முடிவு செய்தல்
முரண்பட்ட இரண்டு கருத்துகளில் ஒன்று தவறு, ஒன்று சரியானது. முரண்பட்ட இரண்டு கருத்துக்கும், இருதரப்பில் இருந்தும் ஆதாரம் தரப்படுகின்றது.
நாம் இங்கு மூன்றாம் நபராக இருக்கின்றோம். ஏதோ ஒன்றை பின்பற்ற வேண்டும். இருதரப்பிலும் அவரவர்கள் தங்கள் கருத்துக்கான சான்றுகளை ஆய்வு செய்து சமர்ப்பித்து தான் பிரச்சாரம் செய்கின்றார்கள். இப்படி இருதரப்பின் உலமாக்களும் ஆய்வு செய்துள்ளனர்.
நாங்கள் ஆய்வு செய்துவிட்டோம், ஆகையால் நாங்கள் சொல்லும் கருத்தை அப்படியே பின்பற்றுங்கள், என்று யாரும் கூறுவதில்லை. நாங்கள் ஆய்வு செய்து எங்களின் கருத்துக்கு இவைகளை சான்றுகளாக ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆகவே நாங்கள் சொல்லும் கருத்துக்கு இவைகள் தாம் சான்றுகள் என்று சான்றுகளை நம்முன் வைத்துதான் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
நாம் முன்பே குறிப்பிட்டது போல், ஏதோ ஒன்றை பின்பற்ற வேண்டும். உதாரணமாக நான் ஜகாத் கொடுக்கக்கூடியவனாக இருக்கின்றேன். ஜகாத் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதிலே கருத்து வேறுபாடு இருக்கின்ற காரணத்தினால், ஜகாத் கொடுப்பதையே நிறுத்திவிட முடியுமா? அப்படி நிறுத்தினால் அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாவோம்.
ஜகாத் கொடுக்க வேண்டும் அதுவும் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் சொன்ன முறையில் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த ஜகாத் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. இங்கு ஜகாத் கொடுத்தும் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.
ஆகவே ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு முக்கியமான கடமை, இந்த காலகட்டத்திலே இருக்கிறது. இருமாறுபட்ட கருத்துகளுக்கும் வைக்கக்கூடிய சான்றுகளை பார்த்து எது சரி? என்று முடிவெடுப்பது அவசியமாக இருக்கிறது. இதற்கு ஆலிம் பட்டம் வாங்கி இருக்க வேண்டாம், டாக்டரேட் பட்டம் வாங்கி இருக்க வேண்டாம். அரபி மொழி கூட தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமது தாய் மொழியிலும், நமக்கு ஓரளவு பரிச்சயமான ஆங்கில மொழியிலும், குர்ஆனும், நபி மொழியும் வெளிவந்திருக்கின்றன.
வேளை பளுவின் காரணமாகவும், இன்னும் பிற சூழ்நிலையின் காரணமாகவும், எல்லோரும் இவைகளை பார்க்க இயலாது என்பது நடைமுறையில் உண்மை. ஆனால் ஒரு விஷயம் தவறு என்று ஆதாரங்களின் அடிப்படையில் சுட்டிக் காட்டப்படும் போதும், நான் அதை பார்க்க மாட்டேன் என்று இருப்பது தவறு. அப்படி இருக்கும் போது தான் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாத அமல்களை நாம் செய்ய வழிவகுத்துவிடும். அல்லாஹ்விடம் தண்டனையை பெற்றுத்தரக்கூடிய செயலாக அது அமைந்துவிடும்.
நாமும் இரு மாறுபட்ட கருத்துக்களுக்குடைய ஆதாரங்களை பார்க்கக்கூடிய மூன்றாம் நபராகத்தான் அவைகளை பார்த்தோம். அப்படி பார்க்க முற்பட்ட போது தான், முன்பே குறிப்பிட்டது போல பல தவறான சான்றுகளையும் விளக்கங்களையும் கண்டோம்.
பி.ஜே. சொன்ன கருத்துக்களிலே தவறுகள் இருக்கின்றது என்று சொல்ல இவன் பெரிய இஸ்லாமிய மார்க்க அறிஞனா? மார்க்க ஆராய்ச்சியாளனா? இவன் யார்? என்று யாரும் கேட்கவேண்டிய அவசியமில்லை. அப்படி கேட்க நினைக்கின்றவர்களுக்கு தான் நாம் முன்கூட்டியே மேற்படி விளக்கங்களை தந்துள்ளோம்.
ஒரு பக்கம் மட்டும் பார்த்தவர்கள்
பி.ஜே. யின் கருத்து ஏன் தவறாக இருக்கிறது? என்பதற்கு இவைகள் தான் ஆதாரங்கள் என்று சுட்டிக் காட்டப்பட்ட போதும் பலர் அதை பார்க்கவும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கவும் ஆர்வம் காட்டவில்லை. அதற்கான காரணங்களை அவர்களது பேச்சிலிருந்து அறிய முடிந்தது.
மாறுபட்ட கருத்துள்ள ஒரு விஷயத்தை, ஒரு பக்கம் மட்டும் கேட்டு அது சரி என்று ஒருவர் பின்பற்றினால், அவர் இஸ்லாத்தை பின்பற்றுகிறாரோ இல்லையோ, தனிப்பட்ட நபரை பின்பற்றுகிறார் என்பதற்கு அவரே சான்று, வேறு சான்றுகள் தேவையில்லை.
ஆகவே இதைப்படிக்கக் கூடியவர்கள் ஒரு பக்கம் மட்டும் பார்த்து கருத்து வேறுபாடுள்ள ஒரு விஷயத்தை தீர்மானிப்பவர்களாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் கூறிய காரணங்களை அடுத்து பார்ப்போம் இன்ஷh அல்லாஹ்.
மறுபக்கம் பார்க்க மறுப்பவர்களின் நியாயப்படுத்துதல்
நாம் தவறுகளை நிரூபணங்களோடு சேர்த்துச் சொல்லி, ஆகையால் அந்த கருத்து தவறு என்கிறோம். அல்லாஹ்வும், தூதரும் அவ்வாறு சொல்லவில்லை என்கிறோம். மொட்டையாக பி.ஜே. சொல்வது தவறு என்று சொல்லவில்லை, எதிர்க்கவுமில்லை. அதே போலவே அவர் சொல்லும் எல்லா கருத்துகளையும் தவறு என்று சொல்லவோ, எதிர்க்கவோ இல்லை.
(1) தியாகம்:
அவர்களோ! 'பலவருடங்களாக பி.ஜே. ஏகத்துவப் பிரச்சாரம் செய்கின்றார். அதற்காக அடி, உதை வாங்கி பல தியாகங்களை செய்துள்ளார்' என்று சுட்டிக்காட்டி அவர் செய்த தியாகங்கள் சம்பந்தமான ஸிடிகளை வாங்கிப் பாருங்கள் என்று பதிலுக்கு நம்மிடம் சொல்கின்றனர். வேறு சிலர், அவர் செய்த சின்னத் தவறுகளை எல்லாம் ஏன் பெரிது படுத்துகின்றீர்கள்? என்கின்றனர்.
நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி இஸ்லாத்தை தாங்கி நிற்கும் தூண்களிலே ஒரு தூண் ஜகாத் ஆக இருக்கின்றது. அதை போலவே நபிமொழியின் முக்கியத்துவமும் அணைவரும் அறிந்தது. இப்படிப்பட்ட இஸ்லாமிய அடிப்படை அம்சங்களிலே ஒரு தவறான கருத்து தவறான ஆதாரங்களோடும் விளக்கங்களோடும் பிரச்சாரம் செய்யப்படுவதை சின்ன விஷயம் என்று நினைப்பதே பெரிய தவறு.
அதைவிட முக்கியமான விஷயம், இவர்கள் இப்படிச் சொல்வதன் மூலம் என்ன சொல்ல வருகின்றனர் என்பதை சிந்திக்க வேண்டும். நல்ல விஷயங்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலே சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இடையிடையே, குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாகவும், அதற்கு விளக்கமாக தங்களது சொந்த கருத்துகளையும் சொல்லலாம், தவறுகள் செய்யலாம், அவைகளை நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை என்கின்றனர். தவறுகளை சுட்டிக் காட்டினால், தனி நபரின் பெயருக்கு களங்கம் வரும் அதை நாங்கள் எதிர்ப்போம் என்கின்றனர்.
கட்டிடத்துக்கு அஸ்திவாரம் போட்டவர் அதை சேதப்படுத்தினால் பரவாயில்லை, அதனால் கட்டிடத்துக்கு ஒன்றும் கேடு நேர்ந்து விடாது என்று அவர்கள் சொல்கின்றனர்.
அஸ்திவாரத்தை இடிக்க முற்படுபவர், அதைப் போட்டவராக இருந்தாலும், கட்டிடத்துக்கு பாதிப்பு உண்டாகும், கட்டிடமே தரைமட்டமாக ஆகிவிடும். இதை கட்டிடத்தின் உரிமையாளர்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது, பார்த்துக் கொண்டு இருக்கவும் கூடாது, என்று நாம் சொல்கிறோம்.
(2) தனி நபர் முக்கியத்துவம்
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சொன்ன (இஸ்லாத்)துக்கு ஒரு முஸ்லிம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? அல்லது அதற்கு மாற்றமாக ஒரு தனி நபர் சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து (அவரது பெயருக்கு களங்கம் வரும் என்று) அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் சொல்வதை நிராகரிக்கும் நிலைக்கு போக வேண்டுமா?
அல்லது அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் மாற்றமாக சொன்னாலும் பரவாயில்லை, தனி நபரின் பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்று அதைக் கண்டு கொள்ளாமல் தவறு என்று சொல்லாமல் ஒரு முஸ்லீம் இருக்க வேண்டுமா?
தவறை சுட்டிக்காட்டும் போது, அது உண்மையிலே தவறாக இருக்கும் பட்சத்தில் அதை அவர் ஏற்றுக்கொண்டு கருத்தை மாற்றிக் கொள்ளும் போது, அல்லாஹ் (ஸுப்) அவரது பெயருக்கு எந்த களங்கத்தையும் ஏற்படுத்த மாட்டான் இன்ஷh அல்லாஹ். தவறு என்று தெரிந்தவர்கள் அதை சுட்டிக்காட்டாமல் மௌனம் காத்தால் அவருக்கு அல்லாஹ்விடம் கேள்வி இருக்கின்றது. தவறை செய்தவர் ஏற்றுக்கொள்ளும் போது, அல்லாஹ்வுக்கு பயந்து அதை ஏற்றுக் கொண்டார் என்று அவர் மீதும், அவரது மார்க்கத் தீர்ப்புகளின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை கூடும்.
(3) பி.ஜே.யை எதிர்ப்பவர்கள் தான் தவறு என்று சொல்கிறார்கள்:
இணை வைப்புக்கும், பித்அத்துக்கும் எதிராக பி.ஜே. பிரச்சாரம் செய்கின்ற காரணத்தினால், இணை வைக்கக் கூடியவர்கள் தான் பி.ஜே.யை எதிர்க்கின்றனர். அவர்கள்தான் பி.ஜே.யின் கருத்து தவறு என்கின்றனர். ஆகவே பி.ஜே.யின் கருத்து தவறு என்று யார் சொன்னாலும் நாங்கள் அதை நம்ப மாட்டோம், அவர்கள் தரும் ஆதாரங்களை பார்க்க மாட்டோம் என்று கண்களை அவர்கள் மூடிக்கொள்கின்றனர்.
இணைவைப்புக்கும், பித்அத்துக்கும் எதிராக அவர் பிரச்சாரம் செய்வதை நாம் எதிர்க்கவில்லை. அவரை எதிர்க்கக் கூடியவர்களாக இருப்பதினால், அவரது கருத்து தவறு என்று கூறவில்லை.
அவரது கருத்து தவறானதாக இருப்பதினால் அவரை எதிர்க்கக் கூடியவர்களாக மாறிக்கொண்டிருக்கிறோம்.
(4) பேச்சாற்றல் மற்றும் விவாதத்திறமை மிக்கவர்
பேச்சாற்றலினால் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியவர். கும்பகோணத்தில் பத்து இலட்சம் முஸ்லிம்கள், அவரது தலைமையிலே குவிந்தனர். படிக்காதவர்களுக்கும் புரியும் வண்ணம் பேசிக்கவரக் கூடியவர். விவாதத்திறமையில் அவரைப் போல் யாருமில்லை. அவரிடம் விவாதம் செய்ய, மற்றவர்கள் பயந்து ஒடுகிறார்கள். சொல்வது உண்மையாக இருந்தால் அவரோடு விவாதம் செய்து உண்மையை நிரூபிக்கட்டும். ஆகவே அவர் கூறுவது தான் சரியான கருத்து என்று அவர்கள் சொல்கின்றார்கள்.
பேச்சாற்றல், விவாதத் திறமை என்பதெல்லாம் அல்லாஹ் (ஸுப்) அருளிய ஒரு அருட்கொடை. பேச்சாற்றல் உள்ளவர்கள் சொல்வது எல்லாம் சரியான கருத்து, மற்றவர்கள் சொல்வது தவறான கருத்து என்று சொல்வார்களேயானால், அதை ஒரு அளவு கோலாக எடுப்பார்களேயானால், இவரைவிட பேச்சாற்றல்மிக்கவர்கள் இஸ்லாத்துக்கு வெளியே கூட இருக்கின்றார்கள், என்று நாம் சொல்கின்றோம். அது மட்டுமல்ல பேச்சாற்றலாலும் விவாதத்திறமையினாலும் தவறான கருத்தைக்கூட சரியான கருத்து என்பது போல காட்ட இயலும் என்று நாம் சொல்கிறோம்.
பி.ஜே. அவர்கள் தவறான கருத்தை, சரியானது போல் காட்ட, விவாதத் திறமையை பயன்படுத்தியுள்ளார் என்பதற்கான ஆதாரமும் பின்னால் தரப்பட்டுள்ளது.
(5) த.நா.த. ஜமாத் இயக்கத்தை அழிக்க திட்டம்
த.நா.த. ஜமாத் என்ற இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறாமையினால் அந்த இயக்கத்தை நசுக்க பழைய சகாக்கள் (த.மு.மு.க) மற்றும் வேறுபல இயக்கங்களும் போடும் திட்டம் தான் இது. ஆகவே அவரது கருத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம், மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள், அதனால் இதனை கண்டு கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
த.நா.த. ஜமாத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறாமையினால் அதை அழிக்க நாம், பி.ஜே.யின் கருத்து தவறு என்று சொல்லவில்லை. எந்த இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் சொல்லாததை சட்டமாக்க நினைத்தால், அது நமக்கு ஆதாரங்களின் அடிப்படையில் தெரிய வந்தால் அதை நாம் எதிர்ப்போம், ஒவ்வொரு முஸ்லிமின் கடமை அது என்று நாம் சொல்கிறோம்.
(6) பி.ஜே.யின் ஆய்வில் தவறு வராது
மார்க்கத்தை அடி வரை சென்று ஆய்வு செய்யக்கூடியவர். அலசி ஆராய்ந்து தான் முடிவெடுப்பார். ஆகவே அவரது ஆய்வும் மார்க்கத் தீர்ப்பும் சரியாகத் தான் இருக்கும் அதில் தவறு வராது என்று அவர்கள் சொல்கின்றனர்.
தனிப்பட்ட ஒரு நபர் கூறுவதுதான் இஸ்லாம் என்று ஏற்க வேண்டும் என்றால், அது அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைத் தான் அப்படி ஏற்க முடியும் என்று நாம் கூறுகின்றோம். மற்ற மனிதர்கள் அனைவரும் தவறிழைக்கக் கூடியவர்களே! என்று நாம் சொல்கின்றோம்.
இஸ்லாத்தின் அளவுகோல்
மேற்கண்ட காரணங்கள் தான் பி.ஜே.யின் கருத்து சரி என்பதற்கு ஆதாரங்களா? இஸ்லாதுக்கு இவைகள் தான் அளவு கோலா?
இவைகள் தாம் ஆதாரங்கள் என்று அவர்கள் கூறுவார்களேயானால், அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றவில்லை தனிநபரை பின்பற்றுகின்றார்கள் என்பதற்கு வேறு சான்றுகள் தேவையில்லை அவர்களே சாட்சியாக இருக்கின்றார்கள்.
இவைகள் ஆதாரம் இல்லை என்று சொல்வார்களேயானால் சொன்னதோடு நிற்காமல் பி.ஜே. அவர்கள் தரக்கூடிய ஆதாரங்கள் சரியா? தவறா? என்று பார்க்க வேண்டும். நாம் அதை செய்யும் பொழுதுதான் தவறு என்று கண்டுகொண்டோம். அதைத் தான் இனி பார்க்க இருக்கின்றோம் இன்ஷh அல்லாஹ்.
தவறு என்பது தெரிய வந்தால், அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்து அதை சம்மந்தப்பட்டவர்களிடமும், பின்பற்றுபவர்களிடமும் இந்த விஷயம் தவறாக இருக்கின்றது என்பதை எத்தி வைக்க வேண்டும். தவறான கருத்தை சொன்னவர் யார்? அவரின் செல்வாக்கு என்ன? அவரைப்பின்பற்ற கோடிக்கனக்கானவர்கள் இருக்கின்றார்கள் நாம் சொல்வது எடுபடாது என்று எல்லாம் பார்த்து, வாய் மூடி மௌனம் காப்பார்களேயானால் அவர்கள் அல்லாஹ்வுக்கு பயப்படவில்லை. ஒரு பெரும் கூட்டத்துக்காக பயந்து அல்லாஹ்வை சந்திப்பதை மறந்து இருக்கின்றார்கள். அந்தக் கருத்துக்கள் சரி என்று ஏற்றுக்கொண்டால் அது அல்லாஹ்வுக்கும் அவர்களுக்கும் உள்ள விஷயம்.
இரு சாராருமே முஸ்லிம்களாக இருக்கின்றோம். மறுமையிலே அல்லாஹ்வின் சந்நிதானத்தில் இந்த வழக்கு வரும் போது, அங்கும் இதே காரணங்களையும், ஆதாரங்களையும் வைப்போம். அல்லாஹ் (ஸுப்) நியாயமான தீர்ப்பைத்தவிர வேறு எதையும் வழங்காதவன். இதை நாம் இரு சாராரும் நினைவுபடுத்திக் கொள்வோமாக!
குர்ஆன் வசனத்தையே...........!
ஜகாத் விஷயத்திலே கடைசியாக நடந்த ஒரு சம்பவத்தை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டிவிட்டு அதன் பின்பு ஜகாத் விஷயத்தை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
மதுரையிலே கடந்த 10ஃ02ஃ2007 அன்று ஆரம்பித்து இரண்டு நாட்கள் பி.ஜே. அவர்களுக்கும், நூர் முஹம்மது அவர்களுக்கும் விவாதம் நடந்தது.
திருக்குர்ஆனின் 6:141 வது வசனம் பி.ஜே.யின் சில விளக்கங்களுக்கு எதிராக இருக்கின்றது. அதனால் பி.ஜே. அந்த வசனம் விளைபொருட்களின் ஜகாத்தை குறிக்காது என்று சொல்லி வேறு விளக்கம் கொடுக்கிறாரர்.
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்..!
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்..!
ஆதாரப்பூர்வமான நபி மொழி குர்ஆனுக்கு முரன்படுமா? இதைத்தான் நாம் அடுத்ததாக அலச கடமைப்பட்டுள்ளோம். அறிவிப்பாளர்களை பொருத்தவரை எந்த குறையும் இல்லாத நபி மொழிகளாக புகாரியிலும் முஸ்லிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ள சில நபி மொழிகள் (கிட்டத்தட்ட ஐம்பது) குர்ஆனுடன் நேரடியாக மோதுவதாக தற்சமயம் தமிழகத்திலே பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இதைச் செய்பவரும் மதிப்பிற்குரிய மௌலவி பி.ஜே. அவர்கள் தான். இவர் சொல்லக்கூடிய இந்த நபி மொழிகளைப் பொருத்தவரை இமாம் புகாரியோ முஸ்லிமோ வேறு அறிஞர்களோ இவைகளை சரியில்லை என்று சொல்லவே இல்லை.
பி.ஜே. அவர்களின் கருத்து
அறிவிப்பாளர்களை பொருத்தவரை எந்தக் குறையும் இல்லை இருந்தாலும் அந்த நபி மொழியின் கருத்து குர்ஆனுடன் நேரடியாக மோதுவதாக இருக்கிறது. அவைகளை குர்ஆனுடன் பொருத்திப் பார்த்தால் எந்த விதத்திலும் பொருந்தவில்லை. இதை ஏற்றுக்கொண்டால் பல குர்ஆன் வசனங்களை மறுக்கக்கூடிய நிலைக்கு ஆளாக்கக்கூடியது. நபி மொழி ஓரிரு அறிவிப்பாளர்கள் உறுதிப்படுத்தக் கூடியவை. மனிதர்களிடமிருந்து தவறுகள் வர சந்தர்ப்பம் உண்டு. இறை வேதத்தின் நிலை அப்படியில்லை. ஆகையால் இறை வேதத்தை ஏற்று முரண்படக்கூடிய நபி மொழிகளை தட்டி விடுகிறோம் என்று விளக்கத்தை அவருக்கே உரிய பாணியில் கூறுகின்றார்.
இதைக் கேட்கும் போது நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு சகோதரர் பி.ஜே. சொல்வது சரிதான் என்று தோன்றும். மக்களைக் கவரக்கூடிய அவருடைய பேச்சாற்றல்தான் அதற்கு காரணம். நாமும் அப்படித்தான் நினைத்திருந்தோம். இவர் சொல்லக்கூடிய ஹதீஸ்கள் உண்மையிலே முரண்படுகின்றனவா? என்பதைத்தான் நாம் பார்க்க இருக்கின்றோம் இன் ஷாஅல்லாஹ்.
விளங்கியதில் தவறு
ஜகாத் விஷயத்தில் பி.ஜே. அவர்கள் எப்படி தவறாக விளங்கிக் கொண்டு ஒரு பொருளுக்கு ஒரு தடைவ என்று சொன்னாரோ அதைப்போலவே நபி மொழி விஷயத்திலும் இவர் விளங்கிக் கொண்டதுதான் தவறாக இருக்கின்றது. ஆதாரப்பூர்வமான நபி மொழி குர்ஆனோடும் நவீன விஞ்ஞானக் கண்டு பிடிப்போடும் அழகாக எந்த வித முரண்பாடும் இல்லாமல் பொருந்திப் போகின்றது. அவரது விளக்கமென்ன? எவ்வாறு பொருந்திப் போகிறது என்பதையெல்லாம் நாம் அலசிப் பார்க்க இருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ். அதற்கு முன்பாக ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
சந்தேகத்தை உண்டாக்குகிறார்
சகோதரர் பி.ஜே. அவர்கள் கூறுவது நமக்கு தெரியாத நம்மால் கண்டு பிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை அந்த அறிவிப்பாளர்கள் விஷயத்தில் இருக்கின்றது என்கின்றார்.
அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமான அறிவிப்பாளர்கள்தான். ஆனால் ஏதோ நடந்திருக்கிறது என்கின்றார். இங்கு ஆதாரப்ர்வமான நபி மொழிகளில் சந்தேகத்தை உண்டுபன்னுவது யார்? என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி ஆதாரப்பூர்வமான நபி மொழியை ஒரு முஸ்லிம் சந்தேகப்பட ஆரம்பித்தால் அதன் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும்.
பொதுவாக முக்கிய அமல்களின் விளக்கங்கள் அதிகமாக நபி மொழிகளில் இருந்துதான் எடுக்கப்படுகின்றன. இஸ்லாமிய சட்டங்களுக்கு நபி மொழிதான் ஆதாரமாக இருக்கின்றது.
ஒரு முக்கியமான அமலை செய்யாமல் ஒரு முஸ்லிம் இருக்கின்றான். அவனிடம் ஏன்? என்று கேட்டால் அவன் பி.ஜே. சொல்கின்றபடியான அடிப்படையில் விளக்கத்தை சொல்லிவிட்டு அதை நியாயப்படுத்தி விடுவான். அந்த அமலை செய்வது அவனைப் பொருத்தவரை கஷ்டமாக இருக்கின்றது. ஒரு ஆத்மாவை அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சோதிக்க மாட்டான் என்பது குர்ஆன் வசனம். ஆகவே அந்த அமலை செய்யச்சொல்கின்ற நபி மொழி ஆதாரப்பூர்வமானதாக இருந்தாலும் குர்ஆன் வசனத்திற்கு முரண்படுகிறது என்று சொல்லி அல்லாஹ்வின் துதர் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார்கள் ஏதோ நமக்குத் தெரியாத ஒரு குறை அந்த நபி மொழியில் இருக்கிறது என்று நியாயப்படுத்துவான்.
அடுத்தவன் பார்ப்பான் அவனுக்கு செய்ய முடியாத வேறொரு அமலுக்கும் இதே காரணத்தைச் சொல்லி நபி மொழியை அலட்சியப் படுத்த முடியும். கடைசியில் அல்குர்ஆனைத்தவிர மற்ற விஷயங்கள் ஏதும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை என்று குர்ஆனை மட்டும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினால் போதும் என்பதற்கு இது அடித்தளம் அமைக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
இஸ்லாத்தின் ஆதாரமே தரைமட்டம்
ஒரு மார்க்க அறிஞர் நாற்பது ஐம்பது நபி மொழிகள் குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தோன்றும். அவர் அவைகளை ஏற்கக்கூடாது என்பார். இன்னொரு அறிஞருக்கு வேறு நுறு ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று விளக்கம் கொடுப்பார்.
இப்படியாக ஒவ்வொருவரும் கருத்து குர்ஆனோடு முரண்படுகிறது என்ற அந்த அளவு கோலை கையில் எடுத்தால் நபி மொழிகளில் பெரும்பாலானவற்றை மறுப்பது ஒரு பெரிய விஷயமில்லை.
அதுமட்டுமல்ல அறிஞர்கள் இப்படி ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மறுப்பதை பார்க்கும் பாமரமக்கள் எல்லா நபி மொழிகளையும் சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.
பின்பு எந்த ஒரு நல்லமலை செய்யும் போதும் இந்த அமலை செய்ய வேண்டும் என்று அறிவிக்கக்கூடிய நபி மொழி சரியானது தானா? என்ற சந்தேகம் வரும். பி.ஜே. சொல்வது போல ஏதோ ஒரு குறை அதில் இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும். பின்பு இப்படிப்பட்ட நபி மொழி சொல்லும் அமலை செய்ய வேண்டுமா? அப்படி செய்தால் நற்கூலி கிடைக்குமா? என்ற சந்தேகம் வரும். நற்கூலி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பித்அத்தான காரியத்தை செய்த தண்டனைக்கு ஆளாக நேரிடுமோ? என்றெல்லாம் நினைக்க வழி வகுக்கும். அதன் விளைவாக அந்த அமல்களை செய்வதில் இருந்து விலக காரணமாக அமையும். திருக்குர்ஆனை மட்டும் பின்பற்றி அமல்களை செய்தால் போதும் என்ற மனநிலைக்கு இது அடித்தளம் அமைக்கும்.
நாம் கேட்பது
குர்ஆனுக்கு முரண்பட்டால் தள்ளிவிட வேண்டும் என்று பி.ஜே. சொல்கின்றார். குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று முடிவு செய்து கொண்டு அதன் அடிப்படையில் பேசுகின்றார்.
இந்த ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வதினால் பல குர்ஆன் வசனங்களை மறுக்க வேண்டி வரும். நபி மொழிகளில் தவறு நிகழ சந்தர்ப்பம் உள்ளது திருக்குர்ஆன் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளது. ஆகையால் இந்த நபி மொழிகளை ஏற்று குர்ஆனை நிராகரிக்கும் நிலைக்கு போய் விடக் கூடாது. அதனால்தான் இந்த ஹதீஸ்களை நிராகரித்துவிட வேண்டும் என்கின்றார்.
இங்கு நாம் கேட்பது என்னவென்றால் பி.ஜே. சொல்லக்கூடிய ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகின்றனவா? குர்ஆனுக்கு இந்த ஹதீஸ்கள் முரண்பட்டால்தான் பி.ஜே. சொல்கின்ற விளக்கங்களைப் பற்றி நினைக்க வேண்டும். இவர் முரண்படுகிறது என்று விளங்கிக் கொண்டால் அது முரண்பட்டதாக ஆகி விடுமா? அவைகள் முரண்படவில்லை என்பதுதான் உண்மை.
இங்கு அவர் எழுதிய வாசகங்களையே எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமாகவும் இவைகளுக்கு விளக்கமாகவும் அமையும். திர்மீதி தமிழ் மொழி பெயர்ப்பில் பி.ஜே. அவர்கள் கூறும் கருத்தைப் பார்க்கவும்: அதாவது ஆதாரப்பூர்வமான நபி மொழி குர்ஆனுக்கு ஒரு போதும் முரண்படாது. அப்படி முரண்படுவது போல் தோன்றினால் நாம் விளங்கிக் கொண்டதில்தான் தவறு என்று அர்த்தம்.
இப்பொழுது அவர் எழுதிய வாசகத்தை அவருக்கே நினைவூட்டவும் அது சரிதான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.
பி.ஜே. அவர்கள் நிராகரிக்கும் நபி மொழியும் அதற்காக அவர் கூறும் காரணங்களும்.
நபி மொழி 7433 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சூரியன் தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனும் (திருக்குர்ஆன்- 36:38வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன்.
அதற்கு அவர்கள் அதன் நிலைகொள்ளும் இடம் அரியாசனத்திற்கு கீழே உள்ளது என்றார்கள்.
நபி மொழி 4803 அபுதர் (ரலி) அறிவித்தார்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சூரியன் தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனும் (திருக்குர்ஆன் 36:38வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் அதன் நிலைகொள்ளும் இடம் இறைவனின் அரியாசனத்திற்கு கீழே உள்ளது என்று கூறினார்கள்.
நபி மொழி 7424 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:
இறைத்துதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி (ஸல்) அவர்கள் அபுதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன். அவர்கள் இது இறைவனுக்கு (அவனுடைய அரியாசனத்திற்கு கீழே) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காக செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம் நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல் என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்றிருக்கும். உடனே அது மறைந்த இடத்தில் இருந்து (இறுதி நாளில்) உதயமாகும். என்று சொல்லிவிட்டு அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும். (தாலிக்க முஸ்தஹருல்லா) என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வுத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி (திருக்குர்ஆன் 36:38வது வசனத்தை) ஓதினார்கள்.
நபி மொழி 3199 அபுதர் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்கு) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காக செல்கிறது. அங்கு அது (கிழக்கில் இருந்து உதயமாவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போக இருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கில் இருந்து உதயமாவதற்கு அனுமதி கேட்கும் அதற்கு அனுமதி அளிக்கப்படாது. மாறாக வந்த வழியே திரும்பிவிடு என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கில் இருந்து உதயமாகும் என்றார்கள். இதைத்தான் சூரியன் தான் நிலைகொள்ளும் ஒர் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமைமிக்க (இறை)வனின் நிர்னயமாகும் எனும் (திர்க்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது என்றார்கள்.
நபி மொழி 4802 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:
சூரியன் மறையும் நேரத்தில் நான் நபி (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தேன். அப்போது அவர்கள் சூரியன் எங்கு (சென்று) மறைகிறது என்று உமக்குத் தெரியுமா அபுதர்ரே? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அது அர்ஷுக்கு (இறை அரியாசனத்திற்கு) கீழே சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வதற்காக செல்கிறது. இதைத்தான் சூரியன் தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இது வல்லமைமிக்கவனும் பேரறிவு கொண்டவனுமான (இறை)வனின் நிர்னயமாகும். எனும் (திருக்குர்ஆன் 36:38வது) இறைவசனம் குறிக்கிறது என்று கூறினார்கள்.
மேற்கண்ட நபி மொழிகள் யாவும் ஸஹிஹ் புகாரியில் பதிவு செய்யப்பட்டவைகள். இவைகளை நிராகரிக்க பி.ஜே. முக்கியமாக இரண்டு காரணங்களை சொல்கின்றார்.
முதல் காரணம்:
இந்த ஹதீஸில் சூரியன் மறைகின்றது என்றெல்லாம் வருகின்றது சூரியன் உதிக்கின்றது சூரியன் மறைகின்றது என்று சொல்வது தவறு. சூரியன் உண்மையில் மறையவில்லை. அந்த காலத்தில் அப்படி நினைத்தார்கள். பூமி ச்ற்றுவதால்தான் இரவு பகல் உண்டாகிறது. இப்படித்தவறாக சொல்லி இருப்பதால் அல்லாஹ்வின் துதர் சொல்லி இருக்கமாட்டார்கள் இது முதல் விஷயம்.
மேற்கண்ட நபி மொழிகள் எல்லாம் குர்ஆனோடும் விஞ்ஞானத்தோடும் எந்த விதத்திலும் முரண்படவில்லை அப்படியே ஒத்துப் போகின்றது என்பதை நாம் விளக்கமாக பார்க்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ். அதற்கு முன்பாக பி.ஜே.யின் தவறான விளக்கங்களை பார்க்க வேண்டியது முதன்மையாக இருக்கின்றது.
முதல் காரணம் தவறு என்பதன் விளக்கம்
பி.ஜே. சொல்கின்ற முதல் காரணம் அடியோடு நிராகரிக்கப்பட வேண்டியவை. இதை சாதாரணமாக சிந்திக்கின்ற யாரும் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.
சூரியன் உண்மையில் உதிப்பதுமில்லை மறைவதும் இல்லை என்ற விஷயம் தெரிந்த கால கட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சூரியன் உதிக்கிறது மறைகின்றது என்ற சொற்களைத்தான் பிரயோகிக்கின்றோம்.
சூரியன் உதிக்கும் நேரம் மறையும் நேரம் என்று செய்தித்தாள்களில் போடப்படுவதை நாம் அறிவோம். பள்ளிக்கூடங்களில் சூரியன் கிழக்கே உதிக்கும் மேற்கே மறையும் என்று சொல்லித்தருகின்றோம். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு மறையும் திசை மேற்கு என்று பாடங்கள் நடத்தப்படுகின்றன. நாம் தெரியாமல் சொல்கின்றோம் என்று அர்த்தமா? இல்லை நாம் தெரிந்து கொண்டே தான் அந்த வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம்.
சூரியன் உதிக்கிறது மறைகிறது என்று சொல்வதினால் பூமி சூரியனை சுற்றுகிறது என்பதை மறுக்கின்றோமா? அல்லது மாற்றமாக சூரியன் பூமியை சுற்றி வருகின்றது என்று சொல்கின்றோமா? அப்படி இல்லை ஆனால் மறைகிறது உதிக்கிறது என்று சொல்வதுதான் எளிதாகவும் அனைவருக்கும் புரியக்கூடியதாகவும் இருக்கின்றது என்ற காரணத்தினால் அப்படி சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அதை வேறு எப்படி சொல்ல முடியும்? என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால் அதற்கு வேறு சரியான வார்த்தைகளை இவ்வளவு சுருக்கமாக போட்டு விளங்க வைக்க முடியாது என்பதை உணரலாம்.
இந்த காரணத்தினால்தான் அந்த நபி மொழியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் இன்று உலகில் வாழக்கூடிய அனைவருக்கும் பூமி சுற்றுகிறது என்பது தெரியாது என்று கூற முடியுமா? கூற முடியாது என்றால் அந்த நபி மொழியையும் ஒதுக்க முடியாது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அல்லாஹ் (சுப்)வும் அப்படித்தான் கூறுகின்றான்.
அல்லாஹ்வும் தனது திருமறையில் அந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகின்றான்.
துல்கர்ணைன் பற்றிக் கூறும் போது:
18:86 சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் அது மறைவதைக் கண்டார்.
18:90 முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்த போது..
இதுமட்டுமல்ல இப்ராஹீம் (அலைஹி) அவர்களிடம் தர்க்கம் செய்தவனைப்பற்றி கூறும் போது:
2:258 அல்லாஹ் சூரியனை கிழக்கில் உதிக்கச் செய்கின்றான் எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய் என்று இப்ராஹீம் கேட்டார்.
சூரியன் உதிக்கிறது மறைகிறது என்று நபி மொழியில் வருவதால் அல்லாஹ்வின் துதர் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று பி.ஜே. கூறுகின்றார். அந்த ஏஐனுநுழு ஊடுஐ தரப்பட்டுள்ளது. அல்லாஹ் (ஸுப்) தனது திருமறையிலும் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளதை மேற்கண்ட வசனங்கள் அறிவிக்கின்றன. இந்த வசனங்களை அல்லாஹ் (ஸுப்) சொல்லியிருக்க மாட்டான் என்று கூற முடியுமா? மேற்கண்ட நபி மொழிகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதற்கு அவர் சொன்ன பிரதான காரணத்தை தெளிவாக விவரித்துள்ளோம். ஆகவே பி.ஜே.யின் கருத்தை நிராகரிப்பதுடன் இதை அவருக்கும் அவருடன் இருப்பதனால் இதுதான் சரி என்று கூறக்கூடிய மௌலவிகளுக்கும் உணர்த்த வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்பதை கூறிக்கொள்கிறோம்.
இரண்டாவது காரணம்
இந்த ஹதீஸின் கருத்தை ஏற்றுக்கொண்டால் சூரியன் தினமும் பூமிக்கு கீழே ஸஜ்தா செய்ய செல்கின்றது செய்துவிட்டு வந்து விடுகின்றது என்று ஆகின்றதாம். அர்ஷ் பூமிக்கு கீழே இருக்கின்றது என்று ஆகிவிடுமாம். ஆனால் அர்ஷ் பூமிக்கு கீழேயெல்லாம் இல்லை வானத்தில் எங்கேயோ இருக்கிறது ஆகையால் கருத்து தவறாக வருகிறதாம். அதுமட்டுமல்ல சூரியன் பூமியை சுற்றுகிறது என்று வருகின்றதாம் இது எப்படி ரசுல் (ஸல்) சொல்லி இருக்க முடியும்? இது வஹியாக இருக்க முடியாது என்று கூறுகின்றார்.
விளக்கம்:
பி.ஜே. அவர்கள் கூறுகின்ற விளக்கங்கள் முற்றிலும் தவறானது. சூரியன் பூமியை சுற்றுவதாக நேரடியாகவோ மறைமுகமாகவோ எங்குமே சொல்லப்படவில்லை. நாம் அந்த ஹதீஸ்களை கொடுத்துள்ளோம் அவைகளை படித்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல தினமும் சூரியன் அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்துவிட்டு அப்படியே வந்துவிடுவதாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார். ஆனால் அப்படி எந்த நபி மொழியிலும் இல்லை. சூரியன் அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்வதற்காக சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்லப்படுகிறது. கடைசியாக அது நிலைகொள்ளும் இடத்தை அடைந்த பின்பு தான் வந்த வழியே திரும்பிவிடு என்று உத்தரவிடப்படும். அதன்படி மேற்கிலிருந்து உதயமாகும் என்றும் மறைந்த இடத்திலிருந்து உதயமாகும் என்றும் இரண்டு ஹதீஸ்களில் (7424 3199) வருகின்றது. அது நிலைகொள்ளும் இடத்தை அடையும்வரை சென்று கொண்டே இருக்கும் என்று தான் சொல்லப்படுகிறது.
வேறு இரண்டு நபி மொழிகளில் (7433 4803) சூரியன் நிலைகொள்ளும் இடம் அரியாசனத்திற்கு கீழே உள்ளது என்று அந்த நிலை கொள்ளும் இடம் சொல்லப்படுகிறது. அதுவரை சூரியன் சென்றுகொண்டே இருப்பதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
இன்னும் ஒரு நபி மொழியில் (4802) சூரியன் எங்கு மறைகிறது தெரியுமா? என்று கேட்டுவிட்டு அது அர்ஷுக்கு கீழே சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வதற்காக செல்கிறது இதைத்தான் சூரியன் நிலை கொள்ளும் ஒரிடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்ற வசனம் (36:38) குறிக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஹதீஸிலும் சூரியன் நிலை கொள்ளும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது அது அர்ஷுக்கு கீழே இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
முதல் விஷயம்:
மேற்கண்ட எந்த நபி மொழியிலும் சூரியன் ஒவ்வொரு நாளும் சிரவணக்கம் செய்துவிட்டு திரும்பி வந்துவிடும் என்று சொல்லப்படவில்லை. சிரவணக்கம் செய்வதற்காக சென்றுகொண்டிருக்கிறது என்றுதான் இருக்கிறது. அதாவது சூரியன் ஓடிக்கொண்டிருப்பதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பூமியை சூரியன் சுற்றி வருவதாக சொல்லப்படவே இல்லை.
பூமிக்கு கீழே ஸஜ்தா!
சூரியன் அர்ஷுக்கு ஸஜ்தா செய்ய புமிக்கு கீழே செல்வதாக அந்த நபி மொழிகளில் எங்குமே சொல்லப்படவில்லை. சூரியன் ஸஜ்தா செய்கின்றது என்பதை நேரடியாக மனிதர்கள் ஸஜ்தா செய்வதைப் போன்று அதற்கு பி.ஜே. விளக்கம் தருகின்றார். அதனால் வந்த கோளாறுதான் எல்லாம்.
ஸஜ்தாவின் விளக்கம்:
நெற்றி மூக்கு இரண்டு உள்ளங்கைகள் இரண்டு மூட்டுக் கால்கள் இரு கால்களின் விரல்கள் ஆகியவை தரையில் படும் வகையில் பணிவது ஸஜ்தா என்று நாம் விளங்கி வைத்துள்ளோம்.
ஆனால் அகராதியில் மட்டுமன்றி திருக்குர்ஆனிலும் நன்றாகப் பணியுதல் என்ற பொருளில் இவ்வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மனிதர்கள் மட்டுமன்றி சூரியன் சந்திரன் நட்சத்திரம் மரம் ஊர்வண மலை உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று திருக்குர்ஆன் 22:18 வசனம் கூறுகிறது.
இவற்றுக்கு முகமோ மூக்கோ கைகளோ மூட்டுக்கால்களோ கிடையாது. குனிந்து மரியாதை செய்வதற்கான முதுகும் கிடையாது. மலைகளோ மரங்களோ இருக்கின்ற இடத்தை விட்டு நகருவது கூட இல்லை. ஆனாலும் இவைகள் தனக்கு ஸஜ்தா செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகின்றான்.
சூரியன் சந்திரன் நட்சத்திரம் ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றி சுழன்று வருகின்றன. இது தான் அவற்றுக்கான ஸஜ்தா. மரங்கள் பூத்து காய்த்து குலுங்குவது அவற்றுக்குறிய ஸஜ்தாவாகும். மலைகள் இப்பூமி தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும் பணியை அல்லாஹ்வின் கட்டளைப்படி செய்து வருகின்றன. இது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும்.
மேற்கண்ட விளக்கம் பி.ஜே.யின் தர்ஜுமா குர்ஆனில் 11வது தலைப்பாகிய மனிதருக்கு ஸஜ்தா செய்தல் என்ற தலைப்பில் பார்க்கலாம். இது சரியான விளக்கமும்கூட என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
சூரியன் ஸஜ்தாவும் மேற்கண்ட நபி மொழிகளும்.
இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சூரியன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது ஓடிக்கொண்டிருப்பது அதற்குறிய ஸஜ்தாவாகும். சூரியன் ஓடிக்கொண்டிருக்கும் காலமெல்லாம் அது ஸஜ்தாவில் இருக்கின்றது. சூரியன் சென்று கொண்டிருப்பது ஸஜ்தாவை நிறைவேற்றத்தான். அது ஸஜ்தா செய்வது அல்லாஹ்வுக்குத்தான்.
சூரியன் மறையும் போது மட்டும் ஸஜ்தா செய்கின்றது என்றும் அதுவும் பூமிக்கு கீழே சென்று ஸஜ்தா செய்கின்றது என்றும் நபி மொழி கூறவில்லை. அதற்கு அப்படி ஒரு விளக்கம் கொடுப்பதால்தான் கீழ் கண்ட குழப்பங்கள் வருகின்றன:
மனிதர்கள் செய்வது போல் ஸஜ்தா செய்கின்றது என்றும் பூமிக்கு கீழு அர்ஷூ இருக்கின்றது என்றும் அதுமட்டுமல்ல சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்றும் குழப்பங்கள் வர காரணமாகிறது.
அல்லாஹ் (ஸுப்) விதித்துள்ள ஓர் இடத்தை அடைந்தவுடண் அதன் ஸஜ்தா ஏற்றுக்கொள்ளப்படாது என்று நபிகள் (ஸல்) அவர்கள் சொல்கின்றாகள். அதாவது சூரியன் ஓடிக்கொண்டிருப்பதற்கு மாற்றமாக நிலைகொள்ளச் சொல்லி அல்லாஹ் (சுப்) உத்தரவு போடுகின்றான். (அங்கு அது பழையபடி ஓட்டத்தை தொடர முடியாது). ஆகவே அதன் ஸஜ்தா மறுக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தருகின்றார்கள்.
ஏழு வானங்களும் பூமியும் அவற்றுக்கிடையே உள்ள அனைத்தும் அர்ஷுக்கு கீழேதான் இருக்கின்றன. ஆகவே சூரியன் சென்று கொண்டிருப்பது அர்ஷுக்கு கீழேதான். அப்படி சென்று கொண்டிருப்பது அதற்குரிய ஸஜ்தா என்பதை முன்பே கண்டோம். அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்வதற்குத்தான் சூரியன் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு அர்ஷுக்கு கீழே போய்தான் அதன் பின்பு ஸஜ்தா செய்யப் போகின்றது என்று அர்த்தமில்லை.
ஆனால் அப்படித்தான் பி.ஜே. விளக்கம் கொடுக்கின்றார். அப்படியானால் மற்ற நேரங்களில் அது ஸஜ்தா செய்யவில்லை என்றாகிறது. அதாவது அர்ஷுக்கு கீழே அது நிலை கொள்ளும் இடத்திற்கு போகும் வரை. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக செயல்படுகிறது என்று அர்த்தம். ஆனால் சூரியன் எப்போதுமே ஸஜ்தாவில்தான் இருக்கிறது என்பதை நாம் முன்பே கண்டோம்.
அர்ஷுக்கு கீழே ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் அதன் ஸஜ்தா மறுக்கப்படும். அதற்கு மேல் அது ஓட்டத்தை தொடரக்கூடாது என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு. குர்ஆன் வசனமும் (36:38) நபி மொழிகளும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
மேற்கே உதிக்கும்:
நிலைகொண்ட பின்பு மேற்கிலிருந்து சூரியன் உதிக்கும் என்று அல்லாஹ்வின் துதர் சொல்கின்றார்கள். இது கியாம நாளின் ஆரம்பத்தைக் குறிப்பதை மற்ற நபி மொழிகளின் வழியாக அறிகின்றோம்.
இப்படி மேற்கே சூரியன் உதிப்பது விஞ்ஞான ரீதியிலும் நடக்க சாத்தியம் உள்ள விஷயம்தான். சூரியனோடு சேர்ந்து பூமியும் சந்திரனும் மற்ற சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கோள்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. சூரியன் ஓட்டத்தை நிறுத்தும் போது மற்றக் கோள்களும் ஓட்டத்தை நிறுத்திவிடும். உதாரணமாக: சூரியன் ஓடுவது நின்ற பிறகு பூமி ஓட்டத்தை நிறுத்தவில்லை எனில் சூரியனை நோக்கி வெகு சமீபமாக சென்று அப்பொழுதே அழிந்து போய்விடும். ஆகையால் பூமியும் அதன் ஓட்டத்தை திடீரென நிறுத்தும். அதிவேகமாக (250 கி.மீ/செகண்ட்) ஒரு நொடிக்கு 250 K/S வேகத்தில் சூரியனோடு சென்றுகொண்டிருந்த பூமி திடீரென நிற்கும் போது பயங்கரமாக குலுக்கப்படும். பூமியில் உள்ளவைகள் அனைத்தும் துக்கி விசிறியடிக்கப்படும். இப்படி துக்கி அடிக்கப்படும் பூமி குலுங்கும் என்பதையெல்லாம் திருக்குர்ஆனிலே நாம் காணக்கூடியதாக இருக்கிறது. விஞ்ஞான ரீதியாகவும் இப்படி நடக்க வாய்ப்புள்ளதை யாரும் மறுக்க முடியாது.
அப்பொழுது பூமி திரும்பி சுற்ற ஆரம்பிக்க சந்தர்ப்பம் உண்டு. அப்படி திரும்பி சுற்றும் போது சூரியன் மேற்கில் உதிக்கும். அதாவது அதுவரை கிழக்கில் உதித்த சூரியன் பின்பு மேற்கில் உதிக்கும். இவை அனைத்தும் விஞ்ஞான ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சாத்தியமான ஒன்றுதான் என்பதற்காகத்தான் மேற்படி விளக்கம் தரப்பட்டுள்ளது.
ஆகவே மேற்கண்ட நபி மொழிகள் குர்ஆனோடும் விஞ்ஞானத்தோடும் அழகாக ஒத்துப் போகின்றது.
உண்மை இப்படி இருக்க.!
மேற்கண்ட நபி மொழிகள் வெகு அழகாக குர்ஆனோடும் நடைமுறை சாத்தியங்களோடும் விஞ்ஞானத்தோடும் எந்த விதத்திலும் முரண்படவில்லை.
ஆகவே அவைகளை அல்லாஹ்வின் துதர்தான் சொல்லியிருக்க முடியும். ஆகவே இவைகளை முரண்படுகிறது என்று சொல்லி ஒதுக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
பூமிக்கு கீழே சென்று சூரியன் ஸஜ்தா செய்வதாக மேற்கண்ட நபி மொழிகள் சொல்கின்றன என்று பி.ஜே. தவறான விளக்கம் கொடுக்கிறார். அவர் அப்படி புரிந்துகொண்டதினால் இது நபி மொழி இல்லை என்கின்றார்.
பி.ஜே. நிராகரிக்கும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகள்
இவர் நிராகரிக்க வேண்டும் என்று சொல்கின்ற நபி மொழிகள் எல்லாமே இதைப்போலத்தான் இருக்கின்றன. இவர் தவறாகவும் யாரும் சொல்லாத ஏற்க முடியாத கருத்துக்களையும் சொல்லி கிட்டத்தட்ட ஐம்பது ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை நிராகரிக்கின்றார். அதாவது அல்லாஹ்வின் துதர் சொன்னதை இவர் மறுக்கின்றார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஒரு பானையில் கொதிக்கும் சோற்றில் ஒரு சோற்றை எடுத்துப் பார்த்தால் அது வெந்ததும் வேகாததும் தெரியும். குர்ஆனோடு மோதுகிறது முரண்படுகிறது என்றெல்லாம் சொல்லி பி.ஜே. நிராகரிக்கும் நபி மொழிகளில் ஒன்றை விவரித்துள்ளோம். மற்றவைகளையும் தேவைப்பட்டால் இன்ஷா அல்லாஹ் விவரிப்போம். தற்சமயம் ஒன்று மட்டும் விவரிக்கப்பட்டுள்ளது.
பி.ஜே.யின் கூட இருக்கும் மௌலவிகள்
நாம் கடந்த காலங்களிலே கண்ட அநாகரீகமான சில செயல்பாடுகளைப் பற்றி இங்கு அவசியம் குறிப்பிட வேண்டியுள்ளது.
ஆதாரத்தின் அடிப்படையிலே பி.ஜே. சொல்வது தவறாக இருக்கின்றது என்று சில மார்க்க அறிஞர்கள் சுட்டிக்காட்டினார்கள். அதற்காக கொதித்தெழுந்த பி.ஜே. அப்படி சுட்டிக்காட்டியவர்களை வாயை அடைக்க வேண்டும் என்று சில செயல்களை செய்தார். நாம் அவைகளை டிவியில் கண்டோம். அப்படி சுட்டிக்காட்டியவர்களின் வீட்டிலுள்ள பெண்களையும் கேவலப்படுத்தும் முகமாக சில இளம் மௌலவிகளை விட்டு பேசச் சொன்னார். அப்படி பேசுவதற்காக சில ஹதீஸ்களை எடுத்துக் கொண்டனர். அது பால் குடி சம்மந்தமான ஹதீஸ்.
பி.ஜே. அவர்கள் சொல்வதுதான் இஸ்லாமா? அவர் சொல்வது இந்த விதத்தில் தவறாக இருக்கிறது என்று யாரும் சுட்டிக்காட்டக்கூடாதா? அவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில்தான் சொல்கின்றார்கள் நீங்களும் ஆதாரத்தின் அடிப்படையில் நாகரீகமான முறையில் எப்படி சரி? என்பதை விளக்குங்கள். மார்க்கத்தைச் சொல்ல உங்களுக்கு மட்டும்தான் ஏகபோக உரிமை வழங்கப்பட்டுள்ளதா?
அப்படி பேசிய மௌலவிகளை கேட்கின்றோம் இதுதான் இஸ்லாமா? இதுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி முறையா? நீங்கள் அனைவரும் பி.ஜே.யுடன் இருக்கின்ற காரணத்தினால் அவர் தவறாக சொல்கின்ற கருத்துக்களையும் அவரை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக சரி என்று ஏற்றுக்கொண்டு அதை மக்களுக்கும் பிரச்சாரம் செய்கின்றீர்கள். தவறு என்று சொல்கின்றவர்களை அவரும் ஒரு முஸ்லிம் சகோதரர் என்றுகூட பார்க்காமல் அல்லாஹ்வின் அச்சமும் இல்லாமல் கேவலப்படுத்தும் விதமாக அநாகரீகமாக பேசுகின்றீர்கள். இப்படியெல்லாம் வாயை அடைத்து அவமானப்படுத்தி நீங்கள் சொல்வது சரி என்று நிலை நிறுத்த முடியாது இன்ஷா அல்லாஹ்.
பி.ஜே. செய்கின்ற தவறுகளை யாரும் சுட்டிக்காட்டக் கூடாது என்று சொல்கின்றீர்களா? நீங்களும் சுட்டிக்காட்ட மாட்டீர்களா? அவர் தவறு என்றால் நீங்களும் ஆமாம் போடுகின்றீர்கள் அவர் சரி என்றால் நீங்களும் தலையை ஆட்டுகின்றீர்கள். அவர் யாரையாவது கேவலப்படுத்தச் சொன்னால் அதை மட்டும் சரியாகச் செய்கின்றீர்கள்.
தவ்ஹீது சகோதரர்களுக்கு!!!
இதைப்படிக்கின்ற தவ்ஹீது சகோதரர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அருட்கொடைகளுக்கு நாம் கேள்வி கேட்கப்படுவோம் ஆகவே மார்க்கத்தில் தவறான கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படுவதை களையும் முகமாக செயல்படுங்கள்.
அல்லாஹ்வும் அவனுடைய துதரும் சொன்னதை சொல்லவில்லை என்றும் சொல்லாததை சொன்னார்கள் என்றும் பிரச்சாரம் செய்வதானது மிகவும் ஆபத்தானது. இதுதான் துய இஸ்லாமா?
நாம் இதுவரை பகிர்ந்து கொண்டவைகளையும் இன்னும் இது போன்று முரண்பட்டுள்ள கருத்துக்களையும் புத்தக வடிவிலோ சிடிக்கள் வடிவிலோ வெளிக்கொனர யாரும் விரும்பினால் நம்மைத் தொடர்பு கொள்ளலாம். இதில் எந்த தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லாமல் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்து செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்படி நம்மை அல்லாஹ் (ஸுப்) ஆக்கியருள் புரிவானாக!
அஸ்ஸலாமு அலைக்கும்.........